14 11
இலங்கைசெய்திகள்

2025 இல் அதிஷ்டத்தில் திளைக்க போகும் அந்த ராசிக்காரர்கள் யார் தெரியுமா !

Share

2025 இல் அதிஷ்டத்தில் திளைக்க போகும் அந்த ராசிக்காரர்கள் யார் தெரியுமா !

இன்னும் சில வாரங்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ள நிலையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு ஆண்டில் வேறுபட்டிருக்கும்.

இதில் முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புவது தொழில் குறித்துதான் ஏனெனில் தொழில் சிறப்பாக இருந்தால் தானே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால், வருகின்ற 2025 ஆம் ஆண்டில் சிறப்பாகவும் மற்றும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கப் போகின்ற அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

1. சிம்மம்
சிம்ம ராசியின் ஏழாவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது.
இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் ஜாக்பாட் அடிக்க வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு துறையிலும் வெற்றி கிடைக்கும்.
சூரியனின் ஆசியால் மதிப்பும், மரியாதையும் அதிகரிப்பதோடு, தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம்.
வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பயணங்களால் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம்.

2. விருச்சிகம்
விருச்சிக ராசியின் நான்காவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது.
இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
புதிய சொத்து, வாகனம், வீடு வாங்கும் கனவு நனவாகும்.
பணிபுரிபவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்.
நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் தேடி வரும்.
சமூகத்தில் நிலை உயரும்.
பெற்றோருடனான உறவு சிறப்பாக இருக்கும்.

3. ரிஷபம்
ரிஷப ராசியின் பத்தாவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது.
இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறவும் வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
வணிகர்கள் ஏராளமான ஆர்டர்களைப் பெற வாய்ப்புள்ளது.
இதன் விளைவாக நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...