இலங்கைசெய்திகள்

தெஹிவளையில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி

24 6630520838dea
Share

தெஹிவளையில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி

வீடொன்றில் தனியாக வசித்து வந்த திருமணமாகாத வயோதிப சட்டத்தரணி ஒருவரை படுக்கையில் வைத்து மர்மமான முறையில் படுகொலை செய்து சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெஹிவளை – களுபோவில வீதி மற்றும் சில்வா குறுக்கு வீதியில் வசித்து வந்த 64 வயதான செபாலிகா சாந்தனி சதரசிங்க என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சட்டத்தரணி வீட்டில் தனியாக காலத்தை கழித்துள்ளதாகவும், அவரது சகோதரர் கனடாவில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சகோதரனை தொடர்ந்தும் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ள அவர், கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி தொடர்புகொண்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கனடாவில் வசிக்கும் சகோதரர் மிரிஹானாவில் வசிக்கும் தனது நண்பரிடம் கூறியதையடுத்து கொஹுவல பொலிஸில் நேற்று 29 ஆம் திகதி மதியம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மர்மமான முறையில் சட்டத்தரணி படுகொலை செய்யப்பட்டு சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமையை கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...