rtjy 262 scaled
இலங்கைசெய்திகள்

திங்கட்கிழமை முதல் கொடுப்பனவு!

Share

திங்கட்கிழமை முதல் கொடுப்பனவு!

பயனாளிகளுக்கான கொடுப்பனவை வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை (28.08.2023) இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ள பயனாளிகள் முதல்கட்டத்தில் கொடுப்பனவுகளை பெறுமதி வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவினை கடந்த வெள்ளிக்கிழமை (25.08.2023) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க முன்னதாக அறிவித்திருந்தார்.

அத்துடன் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு இம்மாதத்துக்குள் கொடுப்பனவுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் செஹான் சேமசிங்க கூறியிருந்தார்.

மேலும், அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை இதுவரை காலமும் வழங்கப்பட்ட நலன்புரி கொடுப்பனவுகளை தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியிருந்தமைக்கு அமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் முன்னதாக சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...