tamilni 62 scaled
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கவுள்ள பொதுமக்களின் வருமானம் : நிம்மதி தரும் மாற்றம்

Share

அதிகரிக்கவுள்ள பொதுமக்களின் வருமானம் : நிம்மதி தரும் மாற்றம்

இன்னும் சிறிது காலத்தின் பின்னர் பொருட்களின் விலையேற்றத்திற்கு ஏற்றவாறு பொதுமக்களின் வருமானம் அதிகரிக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் பொறுமையாக இருந்தால் நிம்மதி தரும் மாற்றம் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து கருத்து வெளியிட்ட மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் குறிப்பிடுகையில்,

இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அதற்கு ஏற்ற வகையில் நாட்டு மக்களின் வருமானம் இன்னமும் அதிகரிக்கவில்லை.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் போது உணரப்படும் வேதனை நிறைந்த நிலை இன்னமும் இருக்கின்றது. இது ஓரளவுக்கு இலகு படுத்தப்பட்டதே தவிர முழுமையாகக் குறைந்துவிடவில்லை.

இதன் நேர்மறையான பிரதிபலன்கள் கிடைப்பதற்கு சில காலம் எடுக்கும். பணவீக்கம் 6 வீதமாகக் குறைந்த போதிலும் பொருளாதாரம் 6 வீதத்துக்கு இன்னமும் வளர்ச்சியடையவில்லை.

மக்களின் வருமானம், பொருட்களின் விலை ஏற்றத்துக்கு ஏற்ற வகையில் அதிகரிக்க வேண்டும். அதற்கு சில காலம் எடுக்கும். அதன் பின்னரே பொருட்களின் விலையேற்றத்திற்கு ஏற்றவாறான வருமானம் மக்களுக்கு கிடைக்கும்.

கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு இயல்புநிலை ஏற்பட அவகாசம் தேவை. இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை. இதே பாதையில் பயணிக்க வேண்டுமானால் அந்தப் பாதையில்தான் செல்ல வேண்டும். மாறினால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும்.

வலி மிகுந்ததாக இருந்தாலும், முடிவுகள் நீண்ட காலம் நீடிக்கும். இதற்கு சிறிது காலம் எடுக்கும். மக்கள் பொறுமையாக இருந்தால் அந்த நிம்மதி அவர்களுக்குக் கிடைக்கும்.

இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளான நாடுகள் பல ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அதிலிருந்து மீளவில்லை. நாம் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குள் அந்தப் பாதையில் பயணித்துள்ளோம். அந்த நிலையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...