tamilni 365 scaled
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான பணத் தொகை

Share

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான பணத் தொகை

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் தகுதியுடைய அனைவருக்கும் வெளியாரின் தலையீடுகள் இன்றி நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெற வேண்டுமானால் தகுதியுடைய அனைவரும் மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்காத எவருக்கும் நலன்புரி நன்மைகள் கிடைக்காதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்றும் நடவடிக்கை கடந்த 15ஆம் திகதி ஆரம்பமாகியது.

அஸ்வெசும முதல் கட்டத்துக்கான விண்ணப்பங்களை அனுப்பாத மற்றும் குடும்பங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த ஆனால் வீட்டுத் தகவல் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படாத அனைவரும் இரண்டாவது கட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் தகுதியுடைய அனைவருக்கும் வெளியாரின் தலையீடுகள் இன்றி நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...