24 6626498338e1c
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையினால் ஏற்பட்டுள்ள சாதக நிலை

Share

ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையினால் ஏற்பட்டுள்ள சாதக நிலை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிவாரணத் தொகை மற்றும் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்டவை ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையின் காரணமாகவே நடந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ்(Vadivel Suresh) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தலைமையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்ட ஜனாதிபதியின் பணி பாராட்டத்தக்கது. வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க ஜனாதிபதியால் முடிந்தது.

அவருக்கு இருக்கும் வெளிநாட்டு தொடர்புகளின் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வரவும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகைகளை வழங்கவும் முடிந்தது.

மேலும், 24 இலட்சம் பேருக்கு அஸ்வெசும பலன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறுமய திட்டத்தின் கீழ் காணி உறுதிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் அரச சேவையின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையின் காரணமாகவே நடந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
23 657a8557d51bd md
செய்திகள்இலங்கை

காய்கறி விலையில் கடும் அதீத உயர்வு: பச்சை மிளகாய் 1,000 ரூபாயைத் தாண்டியது; மக்கள் கடும் அவதி!

இலங்கையின் சில பகுதிகளில் தாழ்நிலக் காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத உயர்வை எட்டியுள்ளதாகச்...

25 6943e3aa87891
செய்திகள்உலகம்

தன்னை ‘ஹீரோவாக’ காட்டிக்கொள்ள 12 நோயாளிகளைக் கொன்ற மருத்துவர்: பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு!

பிரான்சில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் திட்டமிட்டு விஷ ஊசி செலுத்தி, 12 பேரின் மரணத்திற்கு காரணமான...

1813418 flight12
செய்திகள்இந்தியா

அடர்ந்த மூடுபனி: டெல்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...

674b2a65b606d hardik pandya in frame 191544440 16x9 1
விளையாட்டுசெய்திகள்

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி: 16 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா புதிய சாதனை!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான 5-ஆவதும் கடைசியுமான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில்...