tamilnaadi 54 scaled
இலங்கைசெய்திகள்

மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்படும் பணம்

Share

மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்படும் பணம்

இந்த நாட்டில் வறுமையை ஒழிப்பதில் அஸ்வெசும திட்டம் வலுவான பங்களிப்பை வழங்கும் என்று நம்புகிறோம் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பயனாளிகளுக்கான நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் விசேட செயற்றிட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான நிலைக்குத் திரும்பியுள்ளதுடன் மக்களின் வறுமையை ஒழிப்பதில் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

நமது நாட்டில் வறுமையை போக்கவும், மக்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வந்தன.

சமுர்த்தி வேலைத் திட்டம் பிரதான இடத்தைப் பெற்றதுடன், தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும திட்டத்தின் ஊடாக அது மேலும் விரிவுபடுத்தப்பட்டது.

அஸ்வெசும திட்டம் அரசியல் சாராமல், தரவு அடிப்படையில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தரவு அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும் கணக்கீடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இறுதிப் பட்டியலின்படி, மக்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க வாய்யப்பளிக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளுக்கான நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும்.

இந்த நாட்டில் வறுமையை ஒழிப்பதில் அஸ்வெசும வலுவான பங்களிப்பை வழங்கும் என்று நம்புகிறோம்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 6908adfc6e76f
செய்திகள்இலங்கை

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுக்க, சிறார்களுக்குப் பாலியல் கல்வித் திட்டம் அவசியம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாப்பதற்காக, அவர்களுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வித்...

Sri Lankas apparel export
செய்திகள்இலங்கை

ஆடைக் கைத்தொழில் துறையினர் 2026 பட்ஜெட்டை வரவேற்கின்றனர்: ஆனால் நிலையான கொள்கை அமுலாக்கம் அவசியம்!

இலங்கையின் மிகப்பெரிய தொழில்துறை மற்றும் ஏற்றுமதி வருமான ஆதாரமான ஆடைத் தொழில்துறை, 2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின்...

siemens healthineers insights series 43 digital platforms in healthcare
இலங்கைசெய்திகள்

இலங்கையின் இலவச சுகாதார சேவை டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது: அடுத்த 10 ஆண்டுகளுக்கான மூலோபாயத்தை வகுக்க வழிகாட்டுதல் குழு ஸ்தாபனம்!

இலங்கையின் இலவச சுகாதார சேவையை முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக, சுகாதார மற்றும் பொது ஊடக...

ananda wijepala
செய்திகள்இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் எவருமில்லை: அநுராதபுரத்தில் 7,100 பேர் – அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தகவல்!

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே எந்தவொரு சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரியும் சேவையில் இல்லை என்று...