விரைவில் நிவாரணம்: ஜனாதிபதி அறிவிப்பு
அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் இன்று (29.02.2024) கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “அஸ்வெசும” மற்றும் “உறுமய” திட்டங்களை மக்களிடம் முறையாக எடுத்துச் செல்ல அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.