19 10
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு நெருக்கடி

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு நெருக்கடி

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் ஏனையவர்களுக்கும் இணையவழி விசா வழங்கப்படாமையால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள On Arrival Visa கருமபீடத்தில் விசா பெற நீண்ட வரிசை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்குள் நுழைவதற்கான விசாக்களை வழங்குவதற்கு குளோபல் நிறுவனத்தை நீக்கிவிட்டு பழைய முறைப்படி விமான நிலையத்தில் விசா வழங்க உயர் நீதிமன்றம் கடந்த 02 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.

எனினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பழைய முறைப்படி இணையவழி விசா வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்காத காரணத்தினால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெற நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உயர் நீதிமன்ற உத்தரவுடன் இணையவழி முறைமை மூலம் விசா வழங்குவது நிறுத்தப்பட்டதுடன், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தே விசா பெற வேண்டும்.

இலங்கையில் ஓகஸ்ட் மாதம் முதல் சுற்றுலாப் பருவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கண்டி எசல பெரஹராவைக் காண ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதன் காரணமாக அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஒரே நேரத்தில் வரும்போது, ​​விமான நிலையத்தில் வருகை விசா பெறுவதற்கு நீண்ட வரிசையில் தொடர்ந்து நிற்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...