37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

Share

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வரிசையிலேயே பலர் தங்கள் இரவைக் கழித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 12 மணி நேரமாக வரிசையில் காத்திருந்தும் பணம் செலுத்த வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

அதிகாரிகளின் மெத்தன போக்கு மற்றும் திறமையின்மை காரணமாகவே வரிசைகள் மீண்டும் உருவாகியுள்ளதாக அங்குள்ள மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனினும் 24 மணிநேர கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவையின் ஊடாக நீண்ட வரிசை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதுடன், தற்போது வழமையான முறையில் அந்த சேவைகள் இடம்பெறுவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 127
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கைக்கு உதவ சீனா என்றும் தயார்: அக்குரானாவில் சீன மொழி மையத்தைத் திறந்து வைத்து தூதர் உறுதி!

இலங்கைக்குத் தேவைப்படும் போதெல்லாம் உதவுவதற்கு சீனா தொடர்ந்து ஆவலுடன் காத்திருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதர் கி...

world 126
செய்திகள்உலகம்

ஈரானிய துறைமுக முற்றுகையை ஆதரிக்கவில்லை: இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு!

ஈரானிய துறைமுகங்களுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துள்ள கடல்வழி முற்றுகை நடவடிக்கையை ஐக்கிய இராச்சியம் ஆதரிக்கவில்லை என்று...

world 125
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார், வவுனியா உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை !

இலங்கையின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பலத்த மின்னல் தாக்கங்கள்...

world 124
செய்திகள்உலகம்

உலகளாவிய வேலைவாய்ப்புச் சவால்: வளரும் நாடுகளுக்கு உலக வங்கித் தலைவர் முக்கிய அறிவுறுத்தல்

வாஷிங்டனில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகாலக் கூட்டங்கள் நடைபெறவுள்ள சூழலில், வளரும்...