22 6
இலங்கைசெய்திகள்

தேங்காய் வாங்க கால்கடுக்க நீண்ட வரிசையில் நின்ற மக்கள்

Share

தேங்காய் வாங்க கால்கடுக்க நீண்ட வரிசையில் நின்ற மக்கள்

முன்னர் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் சதொச(sathosa) மற்றும் பலநோக்கு கூட்டுறவு சங்க கிளைகளில் நீண்ட வரிசையில் நின்றனர்.

ஆனால் பொருளாதார நெருக்கடி(economic crisis) சற்று தளர்ந்து பொருட்கள் வந்த பின்னர் அந்த வரிசை அற்றுப்போனது. தற்போது மற்றுமொரு வரிசைக்கு மக்கள் தயாராகிவிட்டனர்.

ஆம் அதுதான் தேங்காய் வரிசை. வீட்டின் சமையல் கூடத்திலிருந்து தேநீர்கடை வரை நாளாந்தம் பயன்படுத்தும் பொருள் தேங்காய் ஆகும்.

எனவே அது அனைவருக்கும் முக்கியமான அத்தியாவசிய பொருளாகும். அந்த வகையில் தற்போது அதனை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசை ஒன்றில் நின்ற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதுதான் பத்தரமுல்லை தென்னை பயிர்ச் செய்கை சபைக்கு சொந்தமான “கப்துருபாய” கடையில் நேற்று (06) காலை, தேங்காய்களை கொள்வனவு செய்வதற்கு வாடிக்கையாளர்கள் குழுவொன்று நீண்ட வரிசையில் நின்று தேங்காய்களை பெற்றுள்ளது.

இதேவேளை தேங்காயின் விலை மேலும் உயரும் என தெரிவிக்கப்படுகிறது. தேங்காய் அறுவடை குறைந்ததாலும், தேங்காய் தொடர்பான ஏற்றுமதிக்கு தேங்காய் பயன்பாடு அதிகரித்துள்ளதாலும், தேங்காய் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...