16 25
இலங்கைசெய்திகள்

ஜனவரியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்..!

Share

ஜனவரியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி மாத இறுதியில் நடத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்றையதினம் (26) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் வேட்புமனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான திகதிகளை அறிவிக்கவும் முடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கட்சித் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் நடத்தப்பட்டு வேட்புமனுக்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்க முன்னரும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி உள்ளூராட்சிமன்றத் தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
google logo
செய்திகள்உலகம்

ஊழியர்களை சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்குமாறு கூகுள் எச்சரிக்கை!

அமெரிக்க விசா வைத்திருக்கும் தனது ஊழியர்கள் சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என கூகுள் நிறுவனம்...

image 42fd4006b9
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளமைக்க யுனிசெப் ஆதரவு: பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் முக்கிய சந்திப்பு!

அண்மைக்கால அனர்த்தங்களினால் சேதமடைந்த பாடசாலைக் கட்டமைப்புகளைச் சீரமைப்பது மற்றும் மாணவர்களின் கல்வியைத் தொடர்வது குறித்து பிரதமர்...

25 69468dc6982f1
செய்திகள்உலகம்

பாலைவன தேசத்தில் பனிப்பொழிவு: சவூதியில் மைனஸ் 4 டிகிரி குளிரால் மக்கள் ஆச்சரியம்!

வெப்பமான வானிலைக்குப் பெயர் பெற்ற சவூதி அரேபியாவில், தற்போது நிலவி வரும் கடும் பனிப்பொழிவு உலக...

images 5 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெருகலில் மீண்டும் வெள்ள அபாயம்: மகாவலி கங்கையின் நீர்வரத்தால் வீதிகள், குடியிருப்புகள் மூழ்கின!

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசம் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கத்...