25 684929aae08be
இலங்கைசெய்திகள்

மாநகரசபையொன்றின் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றிய அநுர தரப்பு

Share

பண்டாரவளை மாநகர சபையின் மேயர் பதவியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிக் கொண்டுள்ளது.

இன்று (11) நடைபெற்ற பண்டாரவளை மாநகர சபையின் மேயர் பதவிக்கான வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தியின் சாகரதீர விஷ்வ விக்கிரம வெற்றி பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சைக்குழு 01 மற்றும் 02 ஆகியவற்றின் தலா ஒவ்வொரு வாக்குகள் பெற்று மொத்தமாக எட்டு உறுப்பினர்களின் ஆதரவை அவர் பெற்றுக் கொண்டிருந்தார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சைக்குழு -01 இன் தலைவர் முஹம்மத் நௌஷாத், நான்கு வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டிருந்தார்.

பிரதி மேயராக சுயேட்சைக்குழு-01 ஐச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரை எதிர்த்து முஹம்மத் நௌஷாத் மீண்டும் போட்டியிட்டார்.

எனினும் முன்னைய நான்கு வாக்குகள் மாத்திரமே இம்முறையும் அவருக்குக் கிடைத்தது.

பண்டாரவளை மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் தவிர்த்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
12 20
செய்திகள்உலகம்

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன்: எத்தகைய உதவியையும் வழங்கத் தயார் – ஈரான் தூதுவர்!

மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் அதிகரித்துள்ள சூழலில், இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும்,...

11 21
செய்திகள்அரசியல்இலங்கை

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் அடிப்படை உரிமை மனு: செப்டம்பர் 25-இல் பரிசீலனை!

அரசு புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத்...

10 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரும்புக் கம்பி துளைத்த நபர்: பதுளை வைத்தியசாலையில் உயிர் காக்கப்பட்ட அதிசயம்!

பதுளை போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Badulla) வைத்தியக் குழுவினர், வயிற்றைத் துளைத்து முதுகின் வழியாக...

09 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒன்றிணைவோம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வேண்டுகோள்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வலுசக்தி விநியோகச்...