25 684929aae08be
இலங்கைசெய்திகள்

மாநகரசபையொன்றின் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றிய அநுர தரப்பு

Share

பண்டாரவளை மாநகர சபையின் மேயர் பதவியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிக் கொண்டுள்ளது.

இன்று (11) நடைபெற்ற பண்டாரவளை மாநகர சபையின் மேயர் பதவிக்கான வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தியின் சாகரதீர விஷ்வ விக்கிரம வெற்றி பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சைக்குழு 01 மற்றும் 02 ஆகியவற்றின் தலா ஒவ்வொரு வாக்குகள் பெற்று மொத்தமாக எட்டு உறுப்பினர்களின் ஆதரவை அவர் பெற்றுக் கொண்டிருந்தார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சைக்குழு -01 இன் தலைவர் முஹம்மத் நௌஷாத், நான்கு வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டிருந்தார்.

பிரதி மேயராக சுயேட்சைக்குழு-01 ஐச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரை எதிர்த்து முஹம்மத் நௌஷாத் மீண்டும் போட்டியிட்டார்.

எனினும் முன்னைய நான்கு வாக்குகள் மாத்திரமே இம்முறையும் அவருக்குக் கிடைத்தது.

பண்டாரவளை மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் தவிர்த்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 6849c5dfe0a82
உலகம்செய்திகள்

சீனாவுடன் அதிரடியாக ஒப்பந்தம் செய்த ட்ரம்ப்..! நடக்கவுள்ள மாற்றங்கள்

லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

25 684a2d1c7f215
இலங்கைசெய்திகள்

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல்...

25 684a1d46ac31b
இந்தியாசெய்திகள்

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள சந்தேகம்

இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக...

25 684a2b04cca7e
இலங்கைசெய்திகள்

வெலிகம சம்பவத்தின் போது தவறாக வழிநடத்தப்பட்ட அதிகாரிகள்

2023ஆம் ஆண்டு வெலிகம சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற தன்னையும் ஏனையவர்களையும் மூத்த பொலிஸ் அதிகாரிகள்...