25 684929aae08be
இலங்கைசெய்திகள்

மாநகரசபையொன்றின் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றிய அநுர தரப்பு

Share

பண்டாரவளை மாநகர சபையின் மேயர் பதவியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிக் கொண்டுள்ளது.

இன்று (11) நடைபெற்ற பண்டாரவளை மாநகர சபையின் மேயர் பதவிக்கான வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தியின் சாகரதீர விஷ்வ விக்கிரம வெற்றி பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சைக்குழு 01 மற்றும் 02 ஆகியவற்றின் தலா ஒவ்வொரு வாக்குகள் பெற்று மொத்தமாக எட்டு உறுப்பினர்களின் ஆதரவை அவர் பெற்றுக் கொண்டிருந்தார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சைக்குழு -01 இன் தலைவர் முஹம்மத் நௌஷாத், நான்கு வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டிருந்தார்.

பிரதி மேயராக சுயேட்சைக்குழு-01 ஐச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரை எதிர்த்து முஹம்மத் நௌஷாத் மீண்டும் போட்டியிட்டார்.

எனினும் முன்னைய நான்கு வாக்குகள் மாத்திரமே இம்முறையும் அவருக்குக் கிடைத்தது.

பண்டாரவளை மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் தவிர்த்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...