13 7
இலங்கைசெய்திகள்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமது நிறுவனம் சமர்ப்பித்த 2025 ஆம் ஆண்டுக்கான எரிவாயு விநியோக கேள்வி பத்திரத்தை பரிசீலனை செய்வதில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளதாக தாய்லாந்தின் சியம் எரிவாயு நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதனையடுத்து தாய்லாந்தின் சியம் எரிவாயு நிறுவனம் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி,ஜனாதிபதி செயலகத்தின் கொள்முதல் குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது.

இந்த கடிதத்தில், தாய்லாந்தின் சியம் எரிவாயு நிறுவனம், இந்த கேள்வி பத்திரத்திற்கான அனைத்து தொழில்நுட்பத் தகுதிகளையும் பூர்த்தி செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

எனினும் தமது நிறுவனத்தின் எரிவாயு போக்குவரத்துக் கப்பல்கள் தொடர்பான தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் ஒத்துப்போகவில்லை எனக் கூறி, வெளிப்படையாக பரிசீலிக்காமல் கேள்வி பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தின் ஊடாக முறைப்பாடு அளித்துள்ளது.

எனவே அனைத்து தொழில்நுட்ப தகுதிகளையும் பெற்ற சர்வதேச நிறுவனமான தமது நிறுவனத்தின் கேள்வி பத்திரம் திறக்கப்பட்டு அதன் விலைகள் குறித்து பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மேன்முறையீடு குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....