9 1
இலங்கைசெய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் : புதிய தலைவர் விளக்கம்

Share

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் : புதிய தலைவர் விளக்கம்

மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என புதிதாக நியமிக்கப்பட்ட லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவர் சன்ன குணவர்தன (Channa Gunawardena) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு நேற்று (01) கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், இறுதியாக கடந்த ஜூலை மூன்றாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு திருத்தப்பட்டிருந்தது.

12.5kg சமையல் எரிவாயு சிலின்டரானது 3,790 ரூபாவில் இலிருந்து 3,690 ரூபாவாகவும், 5kg சமையல் எரிவாயு சிலின்டரானது 1,522 ரூபாவில் இலிருந்து 1,482 ரூபாவாகவும், 2.3kg சமையல் எரிவாயு சிலின்டரானது 712 இலிருந்து 694 ரூபாவாகவும் விலைகுறைப்பு மேற்கொள்ளப்பட்டது.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் லிட்ரோ எரிவாயு டர்மினல் லங்கா நிறுவனத்தின் தலைவராக சன்ன குணவர்தன நேற்றைய தினம் (01) நியமிக்கப்பட்டார்.

மேலும், புதிய ஜனாதிபதியின் நியமனத்தை கருத்தில் கொண்டு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து புதிய தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...