tamilni 44 scaled
இலங்கைசெய்திகள்

சமையல் எரிவாயு விலை தொடர்பில் தகவல்

Share

சமையல் எரிவாயு விலை தொடர்பில் தகவல்

சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஐந்தாம் திகதி இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய விலையை தொடர்ந்தும் பேண முடியுமா என்பது குறித்து ஜனாதிபதி செயலகத்துடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 12.5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 145 ரூபாவினால் உயர்த்தப்பட்டது.

ஏனைய எடைகளை கொண்ட சிலிண்டர் வகைகளின் விலையும் ஒப்பீட்டளவில் அதிகரிக்கப்பட்டது.

தற்போது உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் சமையல் எரிவாயுவின் விலையை சீராக பேணுவதற்கு முயற்சிக்கப்படுவதாக குறித்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...