எரிவாயுவின் விலை அதிகரிக்கும் சாத்தியம்
இலங்கைசெய்திகள்

எரிவாயுவின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

Share

எரிவாயுவின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் நாளைய தினம் (04.08.2023) விலை அதிகரிப்பு அறிவிப்பை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு ஏற்றவாறு இலங்கையிலும் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பிரீஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஒரு மெட்ரிக் தொன் எடையுடைய சமையல் எரிவாயுவின் உலக சந்தை விலை 85 டொலர்களால் உயர்வடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றம் உள்நாட்டு சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நாளைய தினம் சமையல் எரிவாயு விலை தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதத்திலும் லிட்ரோ நிறுவனம் விலை மாற்றம் தொடர்பில் அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...