22 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற எம்.பிக்கள் : வெளியான பெயர் பட்டியல்

Share

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற எம்.பிக்கள் : வெளியான பெயர் பட்டியல்

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி நிதியத்தின் பிரதான நோக்கத்திற்கு அப்பாற்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவியை பெற்றுகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இன்று (17) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) குறிப்பிட்டுள்ளார்.

வறிய மற்றும் பின்தங்கிய மக்களுக்கு ஆதரவளிப்பதை மையமாகக் கொண்டு இந்நிதியை பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான பெயர் பட்டியல் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 11 மில்லியன் ரூபா ஐப் பெற்றுள்ளதுடன், ராஜித சேனாரத்னவுக்கு பத்து மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் அலெக் அலுவிஹாரே 2.2 மில்லியன் ரூபா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அவரது மகன் ரஞ்சித் அலுவிஹாரே 4.6 மில்லியன் ரூபா நிதியையும் பெற்றுள்ளனர்.

முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்னவுக்கு 30 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது அத்தோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித் சொய்சா 18 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதுடன், முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா 2.7 மில்லியன் ரூபா நிதியைப் பெற்றுள்ளார்.

ஜோன் அமரதுங்க நான்கு மில்லியன் ரூபா , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மூன்று மில்லியன் ரூபா மற்றும் விதுர விக்கிரமநாயக்க 1.5 மில்லியன் ரூபாவையும் பெற்றுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மனோஜ் சிறிசேன , தயாசிறி ஜயசேகர , பி.ஹரிசன் , பி.தயாரத்ன , மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய பெரேரா மற்றும் பியல் நிஷாந்த டி சில்வா ஆகியோரும் இந்த நிதியில் இருந்து அண்மைய ஆண்டுகளில் உதவிகளைப் பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...