24 667222e1cf72b
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடளாவிய ரீதியில் இரண்டு முதல் ஏழு நாட்களுக்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு

Share

நாடளாவிய ரீதியில் இரண்டு முதல் ஏழு நாட்களுக்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, நாடு தழுவிய ரீதியில் அனைத்து மதுபானங்களின் விற்பனையும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித வலயங்களில் இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை மதுபானம் விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி அறிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் மதுபான சாலைகள் மூடப்படுவதுடன் தம்புள்ளை மற்றும் திஸ்ஸமஹாராம நகர சபைக்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொசன் பண்டிகை வலயங்களில் 21 வெள்ளிக்கிழமை மற்றும் 22 சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு மதுபான சாலைகள் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.

மத்திய நுவரகம் பலாத்த , கிழக்கு நுவரகம் பலாத்த மற்றும் மிஹிந்தலை ஆகிய பிரதேச செயலகங்கள் உட்பட அனுராதபுரம் புனித நகரை உள்ளடக்கிய பகுதிகளில் நேற்று(18.06.2024) முதல் 24 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் பொசன் வாரத்தில் ஏழு நாட்களுக்கும் மதுபான விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கடைகள், பார்கள் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்யும் உணவகங்கள் இந்த காலப்பகுதியில் மூட உத்தரவிடப்படும் என்றும் கலால் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது: டிசம்பர் 16 வரை விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (டிச 2) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை...

1654603198 litro gas distribution
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பு: கட்டம் கட்டமாக விநியோகம்!

யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (LPG Cylinders) கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்...

25 692c8763b7367
செய்திகள்இலங்கை

இலங்கையில் அனர்த்த உயிரிழப்புகள் 465 ஆக அதிகரிப்பு; 366 பேர் காணாமல் போயினர் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதாக...

images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...