5 12
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் : பாதிக்கப்பட்ட தரப்பு குற்றச்சாட்டு

Share

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் : பாதிக்கப்பட்ட தரப்பு குற்றச்சாட்டு

இலங்கைக்கான வாகன இறக்குமதி தடையை தளர்த்தியமை மற்றும் வரி அதிகரித்தமைக்கு மத்தியில் தங்களது உற்பத்தி செயற்பாடுகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டை உள்நாட்டு உந்துருளி உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் முன்வைத்துள்ளது.

அத்துடன் நிதியமைச்சின் சில அதிகாரிகள் உள்நாட்டு கைத்தொழிலாளர்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த சங்கத்தின் உறுப்பினர் சமிந்த ஜயவர்த்தன Samantha jayawardanaசுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் உந்துருளிக்கு தேவையான இயந்திரம், மின்குமிழ்கள், மீற்றர்மானி உள்ளிட்ட ஏனைய உதிரிபாகங்கள் அனைத்தும் நாட்டில் தயாரிக்கப்படுகின்றதாகவும் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், தங்களது உற்பத்திகளுக்கு சிறந்த கேள்வி நிலவுகின்றதுடன் தற்போது உதிரிபாகங்களை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறான தருணத்தில் வாகன இறக்குமதி கட்டுபாட்டை தளர்த்தியமை மற்றும் வரியை அதிகரித்தமை காரணமாக பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சமிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...