5 12
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் : பாதிக்கப்பட்ட தரப்பு குற்றச்சாட்டு

Share

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் : பாதிக்கப்பட்ட தரப்பு குற்றச்சாட்டு

இலங்கைக்கான வாகன இறக்குமதி தடையை தளர்த்தியமை மற்றும் வரி அதிகரித்தமைக்கு மத்தியில் தங்களது உற்பத்தி செயற்பாடுகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டை உள்நாட்டு உந்துருளி உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் முன்வைத்துள்ளது.

அத்துடன் நிதியமைச்சின் சில அதிகாரிகள் உள்நாட்டு கைத்தொழிலாளர்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த சங்கத்தின் உறுப்பினர் சமிந்த ஜயவர்த்தன Samantha jayawardanaசுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் உந்துருளிக்கு தேவையான இயந்திரம், மின்குமிழ்கள், மீற்றர்மானி உள்ளிட்ட ஏனைய உதிரிபாகங்கள் அனைத்தும் நாட்டில் தயாரிக்கப்படுகின்றதாகவும் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், தங்களது உற்பத்திகளுக்கு சிறந்த கேள்வி நிலவுகின்றதுடன் தற்போது உதிரிபாகங்களை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறான தருணத்தில் வாகன இறக்குமதி கட்டுபாட்டை தளர்த்தியமை மற்றும் வரியை அதிகரித்தமை காரணமாக பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சமிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...