2 36
இலங்கைசெய்திகள்

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகும் சட்டமா அதிபர்!

Share

பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை சட்டமா அதிபர் மேற்கொண்டு வருவதாக பிரதி மன்றாடியார் நாயகம் யோஹான் அபேவிக்ரம மாத்தறை நீதவான் அருண புத்ததாசவிடம் தெரிவித்துள்ளார்.

தேசபந்து தென்னகோன், நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை இறுதியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2025 ஏப்ரல் 25 ஆம் திகதியன்று, தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கப்பட்ட பின்னர், நீதிமன்ற அவமதிப்புக்கு சமமானதாக இருந்த அவரது நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த மாத்தறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இது தொடர்பாக நவடிக்கை எடுக்க தனது நீதிமன்றத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்றும் நீதிவான் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, தென்னகோனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 5
இலங்கைபிராந்தியம்

மன்னாரில் தேசிய நீர் வழங்கல் சபையின் விசேட முகாம்: பெரிய கரிசல் கிராமத்தில் ஒரே நாளில் புதிய இணைப்புச் சேவை!

மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய...

images 2 9
செய்திகள்இலங்கை

நாளை மிரிஹானை பொதுக்கூட்டத்தால் போக்குவரத்து மாற்றம்: மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் அறிவுறுத்தல்!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாளை (நவம்பர் 21) நண்பகல் நடைபெறவுள்ள...

japan sri lanka flags
செய்திகள்இலங்கை

5000 ஜப்பானிய மொழிப் பயிற்சியாளர்கள்: இலங்கையில் புதிய வேலைத்திட்டங்களை உருவாக்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டம்!

2026ஆம் ஆண்டிற்குள் ஜப்பானிய மொழிப் பயிற்சியை பூர்த்தி செய்த 5000 இலங்கையர்களைக் கொண்ட ஒரு குழாத்தை...

25 691f13e047667
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் நகர மண்டபத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது!

மாவீரர் வாரத்தையொட்டி, மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் உறவினர்களை ஒன்றிணைத்து, அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று...