2 36
இலங்கைசெய்திகள்

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகும் சட்டமா அதிபர்!

Share

பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை சட்டமா அதிபர் மேற்கொண்டு வருவதாக பிரதி மன்றாடியார் நாயகம் யோஹான் அபேவிக்ரம மாத்தறை நீதவான் அருண புத்ததாசவிடம் தெரிவித்துள்ளார்.

தேசபந்து தென்னகோன், நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை இறுதியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2025 ஏப்ரல் 25 ஆம் திகதியன்று, தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கப்பட்ட பின்னர், நீதிமன்ற அவமதிப்புக்கு சமமானதாக இருந்த அவரது நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த மாத்தறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இது தொடர்பாக நவடிக்கை எடுக்க தனது நீதிமன்றத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்றும் நீதிவான் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, தென்னகோனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...