வழக்கு ஆவணங்களை மென்று உமிழ்ந்த பெண் சட்டத்தரணி கைது
இலங்கைசெய்திகள்

வழக்கு ஆவணங்களை மென்று உமிழ்ந்த பெண் சட்டத்தரணி கைது

Share

வழக்கு ஆவணங்களை மென்று உமிழ்ந்த பெண் சட்டத்தரணி கைது

கெக்கிராவ பகுதியில் அமைந்துள்ள மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்கு ஒன்றின் ஆவணங்களின் சில பக்கங்களை சட்டத்தரணி ஒருவர் கிழித்து வாயில் மென்று உமிழ்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த பெண் சட்டத்தரணியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாவட்ட நீதவான் நீதிமன்றின் சட்டத்தரணி ஒருவரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு ஒன்றின் ஆவணங்களையே அவர் இவ்வாறு அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணி பிணக்கு ஒன்று தொடர்பிலான வழக்கு குறித்த ஆவணங்களின் இரண்டு பக்கங்களை கிழித்து அவற்றை வாயில் போட்டு மென்று உமிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நீதிமன்ற ஆவணப் பிரிவு அதிகாரிகள், நீதிமன்ற பதிவாளருக்கு இது குறித்து அறிவித்துள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவித்ததையடுத்து அதன் அடிப்படையில் பொலிஸார் குறித்த பெண் சட்டத்தரணியை கைது செய்து உள்ளனர்.

இந்தப் பெண் சட்டத்தரணி கடித்து உமிழ்ந்த ஆவணங்களின் சில பகுதிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 6908adfc6e76f
செய்திகள்இலங்கை

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுக்க, சிறார்களுக்குப் பாலியல் கல்வித் திட்டம் அவசியம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாப்பதற்காக, அவர்களுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வித்...

Sri Lankas apparel export
செய்திகள்இலங்கை

ஆடைக் கைத்தொழில் துறையினர் 2026 பட்ஜெட்டை வரவேற்கின்றனர்: ஆனால் நிலையான கொள்கை அமுலாக்கம் அவசியம்!

இலங்கையின் மிகப்பெரிய தொழில்துறை மற்றும் ஏற்றுமதி வருமான ஆதாரமான ஆடைத் தொழில்துறை, 2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின்...

siemens healthineers insights series 43 digital platforms in healthcare
இலங்கைசெய்திகள்

இலங்கையின் இலவச சுகாதார சேவை டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது: அடுத்த 10 ஆண்டுகளுக்கான மூலோபாயத்தை வகுக்க வழிகாட்டுதல் குழு ஸ்தாபனம்!

இலங்கையின் இலவச சுகாதார சேவையை முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக, சுகாதார மற்றும் பொது ஊடக...

ananda wijepala
செய்திகள்இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் எவருமில்லை: அநுராதபுரத்தில் 7,100 பேர் – அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தகவல்!

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே எந்தவொரு சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரியும் சேவையில் இல்லை என்று...