tamilni 65 scaled
இலங்கைசெய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு

Share

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு

எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதில்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் நடைமுறையில் இருந்த விலையிலேயே நவம்பர் மாதமும் எரிவாயுவை விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புடன் ஒப்பிடும் போது இம்மாதம் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டியிருந்தாலும், நடைமுறையில் இருக்கும் விலையிலேயே இம்மாதமும் தொடர்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி நிரோஷன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, வாடிக்கையாளர்கள் 12.5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு சிலிண்டரை 3,985 ரூபாவிற்கும், 5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு சிலிண்டரை 1,595 ரூபாவிற்கும் தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம் என அந்த நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நவம்பர் மாதம் 04ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைககு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,12 கிலோ கிராம் எடைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன் அதன் புதிய விலை 3,565 ரூபாவாகும்.

மேலும், 05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 38 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 1,431 ரூபா அறிவிக்கப்பட்டுள்து.

அத்துடன், 02 கிலோகிராம் எடைகொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 668 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது

Share
தொடர்புடையது
download
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் கடலில் பெரும் போதைப்பொருள் வேட்டை! – 50 கிலோ ‘ஹஷிஷ்’ பறிமுதல்; இருவர் கைது!

மன்னார் கடல் பகுதியில் கடற்படையினரால் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 50...

1698224062 NAMAL MEDIA 6 696x487 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலயவின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி? – ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோருகிறார் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு நிலவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து உருவான ‘அரகலய’ (மக்களின் போராட்டம்) மற்றும்...

ms dhoni 2012 1200 1726388754
விளையாட்டுசெய்திகள்

தோனியின் பதவி விலகல் சொந்த முடிவு அல்ல? – பிசிசிஐ கொடுத்த அழுத்தம் குறித்து அம்பலமான உண்மை!

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாகக் கருதப்படும் எம்.எஸ். தோனி, 2017-ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும்...

1739372035 images 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையர்களுக்கு டிஜிட்டல் வரம்: e-BMD திட்டத்தின் கீழ் ஒரே ஆண்டில் 8,027 பேர் பயன்!

இலங்கை அரசாங்கத்தின் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட...