20
இலங்கைசெய்திகள்

போலி மலேசிய கடவுச்சீட்டு பயன்படுத்திய இலங்கையர் கைது

Share

போலி மலேசிய கடவுச்சீட்டு பயன்படுத்திய இலங்கையர் கைது

போலி மலேசிய கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒஸ்ட்ரியாவிற்கு பயணம் செய்ய முயற்சித்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு போலி மலேசிய கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக ஒன்பது மில்லியன் ரூபாவினை குறித்த நபர் செலுத்துவதாக இணங்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த நபரின் செயற்பாடுகளில் சந்தேகம் எழுந்த அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அவர் பயன்படுத்தியது போலிக் கடவுச்சீட்டு என்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நபர் சமர்ப்பித்த கடவுச்சீட்டின் புகைப்படமும் குறித்த நபரின் தோற்றமும் மாறுபட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நபரிடமிருந்து இலங்கை கடவுச்சீட்டு ஒன்றையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எயார் இந்தியா விமான சேவைக்கு சொந்தமான ஏ.ஐ.282 விமானத்தின் ஊடாக குறித்த நபர் ஒஸ்ட்ரியாவின் வியன்னா நோக்கிப் பயணிக்க முயற்சித்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் போலிக் கடவுச்சீட்டுக்காக ஒன்பது மில்லியன் ரூபா செலுத்த இணங்கப்பட்டதாகவும், முதலில் 3 மில்லியன் ரூபா செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

பயணத்தின் நிறைவில் நிலுவைத் தொகையை செலுத்துவதாக இணங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...