22 11
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு : காரணத்தை அம்பலப்படுத்திய அமைச்சர்

Share

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு : காரணத்தை அம்பலப்படுத்திய அமைச்சர்

நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தலையீடே காரணமென வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை பத்திரிகையொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “பண்டிகைகளின் போது பொருட்களின் விலை அதிகரிப்பது சந்தையில் பொதுவான நிலை.

எனவே, எதிர்காலத்தில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தலையிட்டு நாட்டில் பொருட்கள் பற்றாக்குறையை உருவாக்கினர்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்கிறோம், சந்தையில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரச நிறுவனங்கள் மூலம் தலையிடுவதற்கு அரசாங்கமாக நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

குறிப்பாக சதொச மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை 25% குறைக்கப்படுகிறது அத்தோடு பண்டிகைக் காலங்களில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...