f 3 scaled
இலங்கைசெய்திகள்

பதுளையில் மண்சரிவு அபாயம்: 201 பேர் வெளியேற்றம்

Share

பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பசறை, கனவரல்ல மவுஸ்ஸாகலை, மடுல்சீமை, டூமோ ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் 67 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேர் அந்தப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட அனர்த்த நிவாரண சேவை அதிகாரி சஞ்சீவ சமரகோன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி பசறை, கனவரல்ல பகுதிகளைச் சேர்ந்த 18 குடும்பங்கள் (50 பேர்) கனவரல்ல இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மடுல்சீமை, டூமோ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 49 குடும்பங்கள் (151 பேர்) கல்லுல்ல தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குடும்பங்களுக்கான உணவு, மருத்துவ வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு லுணுகலை மற்றும் பசறை பிரதேச செயலக செயலாளர்களின் ஆலோசனையுடன் கிராம சேவகர் மற்றும் அனர்த்த நிவாரண சேவை அதிகாரி ஆகியோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மண்சரிவு அபாயம் காரணமாக தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்புக்குப் பொலிஸாரைக் கடமையில் ஈடுபடுத்த சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட அனர்த்த நிவாரண சேவை அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
26 6978fa83d48ed
செய்திகள்உலகம்

சீனா – ஜப்பான் இடையே விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு: 49 வழித்தடங்களில் சேவைகள் ரத்து; பயணிகளுக்குக் கட்டணத்தை மீள வழங்கத் தீர்மானம்!

சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பெப்ரவரி...

1769561293 Sri Lanka former President Ranil Wickremesinghe Colombo Court 6
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான பொதுச் சொத்து முறைகேடு வழக்கு: இன்று மீண்டும் நீதிமன்றில் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று...

GettyImages 2220430732
உலகம்செய்திகள்

அமெரிக்கா – கனடா இடையே போர் விமானப் போர்: F-35-ஐ வாங்கத் தவறினால் வான்வெளியை ஆக்கிரமிப்போம்– அமெரிக்க தூதுவர் எச்சரிக்கை!

கனடா தனது வான் பாதுகாப்புக்காக அமெரிக்காவின் F-35 போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யத்...

26 69753e82ece93
உலகம்செய்திகள்

மதுரோ கைது: Discombobulator என்ற ரகசிய ஆயுதத்தைப் பயன்படுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீதான தாக்குதலில், அமெரிக்கப் படைகள் ‘Discombobulator’ என்ற மர்மமான ரகசிய...