25 683ad28c1544b
இலங்கைசெய்திகள்

இதைச் செய்தால் மக்கள் எம்மையும் விரட்டியடிப்பார்கள் – அமைச்சர் லால்காந்த

Share

பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியாவிட்டால் மக்கள் தம்மை விரட்டியடிப்பார்கள் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ஆட்சிக் காலத்தில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதுடன் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க நேரிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு வங்குரோத்து அடைந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவிற்கு பதவியை விட்டு விலக நேரிட்டது என லால்காந்த தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் கொடுக்க எவரும் முன்வரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் நாமும் வீட்டுக்கு செல்ல நேரிடும் எனவும் மக்கள் தம்மை விரட்டியடிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 2 1
இலங்கைசெய்திகள்

யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – தமிழ்த் தேசிய கூட்டணி சந்திப்பு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழில் இடம்பெற்றுள்ளது....

25 683c8c39bbd50
இலங்கைசெய்திகள்

குடிவரவு கொள்கைகளை விரைவில் திருத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

தற்போதுள்ள, குடிவரவு சட்டக் கொள்கைகளை விரைவாகத் திருத்துவதற்கான திட்டங்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். இந்தியாவில்...

image a23900d6f4 920x425 1
இலங்கைசெய்திகள்

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சியின் பிரதேச சபைகளில் உறுப்பினர்கள் சத்தியபிரமாணம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்...

25 683cfd13e6c54
இலங்கைசெய்திகள்

நைஜீரியாவில் பேருந்து விபத்து: 22 விளையாட்டு வீரர்கள் பலி

நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கானோவின் பாலம் ஒன்றில் இருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22...