tamilni 249 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டின் சிறைச்சாலைகளில் கடும் இடநெருக்கடி

Share

நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் கடும் இடநெருக்கடியும் வசதிக்குறைவும் ஏற்பட்டுள்ளதாக அண்மைக்கால புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைக்கு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 232 வீதத்தினால் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நாடெங்கும் உள்ள 27 சிறைச்சாலைகளில் 187 மலசலகூடங்களின் பற்றாக்குறை காணப்படுவதுடன், 287 மலசலகூடங்களை திருத்தியமைக்க வேண்டியிருப்பதாகவும் சிறைச்சாலைகள் தொடர்பான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் தற்போதைக்கு சிறைச்சாலைகளின் கடும் இடநெருக்கடி காரணமாக தொற்றுநோய்கள் கடுமையாக பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு தொடக்கம், 2021ம் வரையான ஆண்டுகளில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட கைதிகளின் கலவரங்கள் காரணமாக சில சிறைச்சாலைகளின் கட்டிடங்களும் ஏராளமாக சேதமுற்றுள்ளன.

அவை இதுவரை காலமும் திருத்தியமைக்கப்படவில்லை.

இதற்கிடையே பல்வேறு வழக்குகளில் பிணை வழங்கப்பட்டுள்ள போதும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் சுமார் 1795 கைதிகள் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் வருடமொன்றுக்கு 800 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையொன்றை சிறைச்சாலைகளின் பராமரிப்புக்காக ஒதுக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...