tamilni 355 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 28 இலங்கையர்கள் நாடு கடத்தல்

Share

வெளிநாடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 28 இலங்கையர்கள் நாடு கடத்தல்

குவைத்தில் இருந்து 28 இலங்கையர்கள் இன்று காலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குவைத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் இலங்கைக்கு வருவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்த ஒரு குழுவாகும். மேலும் இந்த இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு தூதரக அதிகாரிகள், பொலிஸ் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் நீதித்துறையுடன் இணைந்து பணியாற்றினர்.

இந்தக் குழுவினர் இன்று 27ஆம் திகதி காலை 06:30 மணியளவில் குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

24 வீட்டுப் பணிப்பெண்களும் 04 ஆண்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர். அங்கிருந்த பெண்களில் ஒருவர் கர்ப்பிணி எனவும் தெரியவந்துள்ளது.

வந்தவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் வசிப்பவர்களாகும்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் இந்தக் குழுவினர் தமது கிராமங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்துக் கட்டணத்தைச் செலுத்தியது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...