24 6621f2b059969 1
இலங்கைசெய்திகள்

குற்றவாளிக்கு உதவிய பொலிஸ் அதிகாரிகள்

Share

குற்றவாளிக்கு உதவிய பொலிஸ் அதிகாரிகள்

குருநாகல் (Kurunegala) பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த போதைப்பொருள் குற்றவாளியொருவருக்கு உதவிய குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல் – மாவத்தகம பொலிஸ் நிலையத்தின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் (S.I) ஒருவரும் தொரடியாவ பொலிஸ் நிலைய சார்ஜண்ட் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாயில் இருந்தபடி இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகத்தை நடத்தி வரும் நபருடன் உரையாடுவதற்காக குறித்த பொலிஸார் குற்றவாளிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த உதவியதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கமைய, மேற்குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Share

Recent Posts

தொடர்புடையது
images 13
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகப் பொது எதிரணி: ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைவு – நுகேகொடையில் பேரணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது...

MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...