24 6640347fcebe2
இலங்கைசெய்திகள்

குளியாப்பிட்டிய இளைஞனின் கொலைக்கான காரணம்

Share

குளியாப்பிட்டிய இளைஞனின் கொலைக்கான காரணம்

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சுசித் ஜெயவம்ச என்ற இளைஞன், 17 வயது யுவதியை காதலித்து அவரை கர்ப்பமாக்கி திருமணம் செய்துக்கொள்ள மறுத்தமையே கொலைக்கான காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட இளைஞன் சிகிதியின் (பிரதான சந்தேகநபரின் ) மகளுடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்த நிலையில், வேறு ஒரு யுவதியுடனும் காதல் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும், அந்த யுவதியும் தற்போது கர்ப்பமாக இருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, குறித்த இளைஞரை வீட்டில் வைத்து கொலை செய்து பின்னர் சடலத்தை வாகனத்தின் பின் இருக்கையில் அமர வைத்து மாதம்பே பன்னிரெண்டாம் காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.

தனது மகளை காதலித்து ஏமாற்றிய காரணத்தினால் இந்த கொலை இடம்பெற்றதாகவும் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் முன்பு திருமணமாகி பின்னர் சட்டப்பூர்வமாக மனைவியிடமிருந்து பிரிந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...