19 23
இலங்கைசெய்திகள்

இருவர் நாட்டை விட்டு தப்பியோட்டம்

Share

பாதாள உலகக்குழுக்களின் இரண்டு முக்கிய தலைவர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல போதைப் பொருள் வர்த்தகரான குடு சலிந்து மற்றும் பாதாள உலகக் குழுத் தலைவர் பொடி லெசி ஆகியோர் இவ்வாறு நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இருவரும் அண்மையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். இருவரும் கடல் மார்க்கமாக நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குடு சலிந்து ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாக வேண்டுமென பாணந்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் குறித்த பிணை நிபந்தனையை குடு சலிந்து நிறைவேற்றத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் குடு சலிந்துவின் இல்லத்தில் பாரிய விருந்துபசாரம் நடத்தப்பட்டதாகவும் இதில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், போதைப் பொருள் வர்த்தகர்கள் பங்கேற்றிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பொடி லெசி என்ற பாதாள உலகக் குழு தலைவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Rain 1200px 22 10 17
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் அதிக மழைவீழ்ச்சி: கடற்பரப்புகளில் பலத்த காற்று வீச எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் மத்தியில், யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக...

images 5 1
செய்திகள்இலங்கைசினிமாபொழுதுபோக்கு

விஜய்-சூர்யா-வடிவேலுவின் ‘Friends’ திரைப்படம் 4K தரத்தில் மீண்டும் வெளியீடு!

நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘ப்ரண்ட்ஸ்’ (Friends) திரைப்படம் மீண்டும்...

images 4 1
செய்திகள்இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள்: QR குறியீட்டு வவுச்சர்கள் வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பாதணிகளைப்...

1720617259 Piyumi 2
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான தொடர்பு: நடிகை பியூமி ஹன்சமாலியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை!

தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான உறவு குறித்து நடிகை...