tamilni 476 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் ஆபத்தான நிலையில் பாரிய கட்டடம்

Share

கொழும்பில் ஆபத்தான நிலையில் பாரிய கட்டடம்

கொழும்பு கோட்டையில் உள்ள க்ரிஷ் கோபுரம் எனப்படும் உயரிய கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 50 மாடிகளுக்கு மேல் உள்ள இந்த கட்டடம் ஓராண்டுக்கு மேலாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளதோடு அதன் மேற்கூரையில் உள்ள கிரேன் பயன்படுத்தப்படாமல் பாதிப்படைந்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.

கொழும்பு கோட்டை வீதியிலுள்ள பரபரப்பான போக்குவரத்திற்கும் அருகிலுள்ள கட்டடங்களுக்கும் கூட இது பெரும் அனர்த்தத்தை உருவாக்கும் என பலர் கூறுகின்றனர்.

இதேவேளை இந்த கட்டட வளாகத்தில் மழையினால் தேங்கி நிற்கும் நீர் காரணமாக டெங்கு நுளம்பு பரவுவதற்கான அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் இன்னும் இந்த திட்டம் இருப்பதாகவும், அதன் எதிர்கால திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறினார்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...