14 13
இலங்கைசெய்திகள்

இலங்கையை சோகமயமாக்கிய கோர விபத்து – பிள்ளையை காப்பாற்றிய தாய் தொடர்பான தகவல்

Share

கொத்மலை, கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த பெண் 5 பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.

அன்னையர் தினமான நேற்று பிள்ளையை உயிரை காப்பாற்ற குறித்த தாய் போராடியமை குறித்து அதிகளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் விபத்தில் தாய் – தந்தை உயிரிழந்த நிலையில் 3 பிள்ளைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மீரியபெத்த பகுதியில் இருந்து கொஸ்லந்த பிரதேசத்தில் உள்ள பெண்ணின் சகோதரனின் வீட்டிற்கு சென்ற மீண்டும் கண்டி செல்வதற்காக இந்த பேருந்தில் குறித்த குடும்பத்தினர் ஏறியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் 3 பிள்ளைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 3 பிள்ளைகள் வீட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்திருந்த கணவனும் உயிரிழந்துள்ளார். 16 மற்றும் 10 வயதுடைய பிள்ளைகளும் 9 மாத குழந்தையுமே இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் 9 மாத பெண் குழந்தையை கையில் பிடித்துக் கொண்டு பல மணி நேரம் போராடிய பெண் நேற்று மாலை உயிரிழந்தார்.

நேற்று நடந்த கோர விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...