25 67b99b20cb050
இலங்கைசெய்திகள்

கொழும்பில் தமிழரின் படுகொலை: பின்னணியில் இருந்த மறைகரம் அம்பலம்

Share

கொழும்பில் தமிழரின் படுகொலை: பின்னணியில் இருந்த மறைகரம் அம்பலம்

கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை பகுதி கடையில் ஒருவரை சுட்டுக் கொல்ல ஒப்பந்தம் வழங்கியவர் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்படி, குறித்த சம்பவத்தின் பின்னணியில் மோதர நிபுன என்ற நபர் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பதற்கு முன்பு கைதான சந்தேகநபர்கள் இருவரும் இந்த தகவலை வழங்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை – கல்பொத்த சந்தியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தலவாக்கலையை சேர்ந்த சசிகுமார் எனும் நபர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகபர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் வசமிருந்த துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து, சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்ளை காட்டச் சென்றபோது, ​​காவல்துறையினரின் துப்பாக்கிகளைப் பறித்து காவல்துறையினரை சுடுவதற்கு முயன்றுள்ளனர்.

இந்த நிலையில், விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், காயமடைந்த இரண்டு சந்தேக நபர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

மேலும், சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...