25 67b99b20cb050
இலங்கைசெய்திகள்

கொழும்பில் தமிழரின் படுகொலை: பின்னணியில் இருந்த மறைகரம் அம்பலம்

Share

கொழும்பில் தமிழரின் படுகொலை: பின்னணியில் இருந்த மறைகரம் அம்பலம்

கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை பகுதி கடையில் ஒருவரை சுட்டுக் கொல்ல ஒப்பந்தம் வழங்கியவர் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்படி, குறித்த சம்பவத்தின் பின்னணியில் மோதர நிபுன என்ற நபர் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பதற்கு முன்பு கைதான சந்தேகநபர்கள் இருவரும் இந்த தகவலை வழங்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை – கல்பொத்த சந்தியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தலவாக்கலையை சேர்ந்த சசிகுமார் எனும் நபர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகபர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் வசமிருந்த துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து, சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்ளை காட்டச் சென்றபோது, ​​காவல்துறையினரின் துப்பாக்கிகளைப் பறித்து காவல்துறையினரை சுடுவதற்கு முயன்றுள்ளனர்.

இந்த நிலையில், விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், காயமடைந்த இரண்டு சந்தேக நபர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

மேலும், சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...

GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...