25 67b99b20cb050
இலங்கைசெய்திகள்

கொழும்பில் தமிழரின் படுகொலை: பின்னணியில் இருந்த மறைகரம் அம்பலம்

Share

கொழும்பில் தமிழரின் படுகொலை: பின்னணியில் இருந்த மறைகரம் அம்பலம்

கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை பகுதி கடையில் ஒருவரை சுட்டுக் கொல்ல ஒப்பந்தம் வழங்கியவர் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்படி, குறித்த சம்பவத்தின் பின்னணியில் மோதர நிபுன என்ற நபர் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பதற்கு முன்பு கைதான சந்தேகநபர்கள் இருவரும் இந்த தகவலை வழங்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை – கல்பொத்த சந்தியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தலவாக்கலையை சேர்ந்த சசிகுமார் எனும் நபர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகபர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் வசமிருந்த துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து, சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்ளை காட்டச் சென்றபோது, ​​காவல்துறையினரின் துப்பாக்கிகளைப் பறித்து காவல்துறையினரை சுடுவதற்கு முயன்றுள்ளனர்.

இந்த நிலையில், விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், காயமடைந்த இரண்டு சந்தேக நபர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

மேலும், சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...