3 8
இலங்கைசெய்திகள்

வேலைக்குச் சென்ற பெண்ணை கழுத்தறுத்து படுகொலை செய்த மர்ம நபர்! அதிகாலையில் நேர்ந்த பரிதாபம்

Share

கொஸ்கம பகுதியில் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை குறித்தப் பெண் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஸ்கம பகுதியில் உள்ள ரப்பர் தொழிற்சாலைக்கு அருகில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும், இந்த படுகொலையை செய்த கொலையாளி தொடர்பில் தகவல்கள் எதும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அவிஸ்ஸாவெல்ல – புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பெண் ரப்பர் தொழிற்சாலையில் பணி புரிவதாகவும், இன்று அதிகாலை வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது அவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...