24 66654b60a98e3
இலங்கைசெய்திகள்

உயரமான இடத்திற்கு மாற்றப்படும் கொலன்னாவ நகரம்

Share

உயரமான இடத்திற்கு மாற்றப்படும் கொலன்னாவ நகரம்

கொலன்னாவ நகரத்தை அதே பகுதியில் உள்ள உயரமான இடத்திற்கு மாற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

தற்போது தாழ்வான பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் புதிய நகரத் திட்டத்தின் கீழ் உயரமான நிலங்களில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதே பகுதியில் பொருத்தமான காணிகள் உள்ளதோடு, கொலன்னாவையின் புதிய நகரத் திட்டத்தின் பிரகாரம் அனுமதியற்ற நிர்மாணங்களைத் தடுக்கும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இத்திட்டத்தின்படி களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைப்பு தயாரிக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் கொலன்னாவ நகரம் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததுடன் பொது இடங்களும் நீரில் மூழ்கியிருந்தன. இதனைத்தொடர்ந்தே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதியின் அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, பிரேம்நாத் சி.தொலவத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...