rtjy 139 scaled
இலங்கைசெய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் கருத்து

Share

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் கருத்து

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் வெளிவர வேண்டும். இந்த விடயத்தில் அரசு அக்கறையுடன் செயற்படுவதனால் தான் அகழ்வாய்வுக்கென நிதியையும் ஒதுக்கியுள்ளது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அகழ்வாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த புதைகுழியிலிருந்து மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், தடயப் பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன.

அந்த எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பிலும், தடயப் பொருட்கள் குறித்தும் தற்போது என்னால் கருத்துரைக்க முடியாது.

அதேவேளை, அகழ்வாய்வு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமா அல்லது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் அடுத்தகட்ட பகுப்பாய்வு நடவடிக்கைகள் என்னவென்று நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்.

எனினும், இந்த மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் வெளிவர வேண்டும் என நீதி அமைச்சர் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

நாள்தோறும் விடுதலைப்புலி போராளிகளின் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்படுவதுடன் பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் நீதி அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

Share
தொடர்புடையது
23 3
இந்தியாசெய்திகள்

ரயில் தாமதமாகிவிட்டாலோ ஏசி வேலை செய்யவில்லை என்றாலோ முழு டிக்கெட் பணத்தை திரும்ப பெறலாம்

ஏசி வேலை செய்யவில்லை அல்லது ரயில் தாமதமாக வந்தால், முழு டிக்கெட் பணத்தையும் திரும்பப் பெறுவது...

19 5
உலகம்செய்திகள்

உக்ரைன் நகரில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்: குடியிருப்பு பகுதிகள் குறி..கெர்சன் குற்றச்சாட்டு

உக்ரைனின் தெற்கு நகரில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு உக்ரைன்...

18 5
உலகம்செய்திகள்

போருக்கு மத்தியில்… ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த கிழக்காசிய நாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலுக்கு முன்னர் ஏற்றுமதிகள் துரிதப்படுத்தப்பட்டதால், ஜூன் மாதத்தில் ஈரானில் இருந்து...

16 7
உலகம்செய்திகள்

பிரான்ஸ் விமான விபத்து: முன்னாள் ராணுவ தளபதி, தம்பதியர் பலி

பிரான்சில் நிகழ்ந்த விமான விபத்தொன்றில், முன்னாள் ராணுவ தளபதி ஒருவர் மற்றும் ஒரு தம்பதியர் என...