tamilni 304 scaled
இலங்கைசெய்திகள்

6 வருடத்திற்கு முன் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பு

Share

6 வருடத்திற்கு முன் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பு

கிளிநொச்சி போராலை என்ற இடத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 143 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கிளிநொச்சி பேராலை என்ற இடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 143 கிராம் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு நேற்றைய (18.01.2024) தினம் குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது நேற்றைய தினம்(18) தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரண்டாது நபர் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து முதலாவது நபர் சார்பாக சட்டத்தரணி சிறிகாந்தா, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையில் அரச சட்ட வாதி என் என். அர்ஜுனகுமார் முன்னிலையாகியிருந்தனர்.

எதிர்தரப்பு சார்பாக முன்னிலையான சட்டத்தரணி குறித்த எதிர்தரப்பு நபர் இதற்கு முன்னர் குற்றங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்றுள்ளவர் என்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையாகவும் காணப்படுகின்றார் எனவும் தண்டனை குறைப்பு விண்ணப்பத்தை செய்து இருந்தார்.

இதேவேளை சட்டமா அதிபர் திணைக் களத்தின் சார்பாக முன்னிலையான சட்ட வாதி தண்டனையானது ஒரு முன்னோடியான தண்டனையாக இருக்க வேண்டும் குற்றவாளிக்கான தண்டனையானது ஒரு தனிநபருக்கான தண்டனையாக கருதவது அல்லாது ஒரு எதிர்கால இளம் சமூகத்தை பாதுகாக்கின்ற ஒரு விடயமாக கருதி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்களை செவிமடுத்த நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Share
தொடர்புடையது
1647574276 3019
செய்திகள்இந்தியா

பகவத் கீதையின் செய்தியை உலகமயமாக்கும் முயற்சி: 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது!

பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் முயற்சிகளை...

DSC 4271
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலை யாத்திரை: பொலித்தீன் இல்லாத தூய தளமாகப் பராமரிக்கத் திட்டம்!

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை (Sri Pada Pilgrimage) அடிப்படையாகக்...

DSC 4271
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா சிங்கர் காட்சியறையில் பயங்கர தீ விபத்து: முழுமையாக எரிந்து சேதம்!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை...

25 68ee64d88d4b3
செய்திகள்இலங்கை

இலங்கையில் பலத்த மழை நீடிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம் 25) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக...