tamilni 304 scaled
இலங்கைசெய்திகள்

6 வருடத்திற்கு முன் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பு

Share

6 வருடத்திற்கு முன் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பு

கிளிநொச்சி போராலை என்ற இடத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 143 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கிளிநொச்சி பேராலை என்ற இடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 143 கிராம் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு நேற்றைய (18.01.2024) தினம் குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது நேற்றைய தினம்(18) தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரண்டாது நபர் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து முதலாவது நபர் சார்பாக சட்டத்தரணி சிறிகாந்தா, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையில் அரச சட்ட வாதி என் என். அர்ஜுனகுமார் முன்னிலையாகியிருந்தனர்.

எதிர்தரப்பு சார்பாக முன்னிலையான சட்டத்தரணி குறித்த எதிர்தரப்பு நபர் இதற்கு முன்னர் குற்றங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்றுள்ளவர் என்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையாகவும் காணப்படுகின்றார் எனவும் தண்டனை குறைப்பு விண்ணப்பத்தை செய்து இருந்தார்.

இதேவேளை சட்டமா அதிபர் திணைக் களத்தின் சார்பாக முன்னிலையான சட்ட வாதி தண்டனையானது ஒரு முன்னோடியான தண்டனையாக இருக்க வேண்டும் குற்றவாளிக்கான தண்டனையானது ஒரு தனிநபருக்கான தண்டனையாக கருதவது அல்லாது ஒரு எதிர்கால இளம் சமூகத்தை பாதுகாக்கின்ற ஒரு விடயமாக கருதி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்களை செவிமடுத்த நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...