இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு அபாயம்!
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு அபாயம்!

Share

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு அபாயம்!

இலங்கையில் சிறுநீரக அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

சிறுநீரக மாற்று சிகிச்சையில் மிகவும் அவசியமான மருந்தான Basiliximab தடுப்பூசி இல்லாததன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாற்றப்பட்ட சிறுநீரகம் உடனடியாக நிராகரிக்கப்படுவதைத் தடுக்க சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முன் Basiliximab கொடுக்கப்பட வேண்டும்.

சிறுநீரக மாற்று வைத்தியசாலைகள் எதிலும் தற்போது இந்த மருந்து இல்லை என சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் தனயார் மருத்துவமனைகளிலும் இந்த மருந்து இல்லை என குறிப்பிடப்படுகின்றது.

Basiliximab மருந்துக்கு பதிலாக பயன்படுத்தப்படும் ஏடிஜி (ஆன்டிதைமோசைட்) என்ற மாற்று மருந்து அரச வைத்தியசாலைகளில் இல்லை என்றும், அது தனியார் துறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் இந்த மருந்து தீர்ந்துவிட்டதால், இவற்றை உடனடியாக வழங்குமாறு மருத்துவமனை மருத்துவ விநியோகப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மருந்து கிடைக்காவிட்டால் சத்திரசிகிச்சையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நேற்றைய (ஜூலை 25) நிலவரப்படி, தேசிய சிறுநீரக மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக பத்து நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர், மேலும் வாரத்திற்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் உள்ளன.

இந்த அத்தியாவசிய மருந்துகள் இல்லாத பட்சத்தில் திடீரென மூளை சாவடைந்து உயிரிழந்த ஒருவரிடமிருந்து சிறுநீரகம் பெறப்பட்டால் அதனை மாற்றும் வாய்ப்பும் இல்லாமல் போகும் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதுள்ள நிலைமைகளின் கீழ் சிறுநீரக சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டால், காத்திருப்புப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் எனவும், சத்திரசிகிச்சைகள் மீண்டும் மீண்டும் தாமதமான பின்னரும் நோயாளிகள் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...