இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு அபாயம்!
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு அபாயம்!

Share

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு அபாயம்!

இலங்கையில் சிறுநீரக அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

சிறுநீரக மாற்று சிகிச்சையில் மிகவும் அவசியமான மருந்தான Basiliximab தடுப்பூசி இல்லாததன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாற்றப்பட்ட சிறுநீரகம் உடனடியாக நிராகரிக்கப்படுவதைத் தடுக்க சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முன் Basiliximab கொடுக்கப்பட வேண்டும்.

சிறுநீரக மாற்று வைத்தியசாலைகள் எதிலும் தற்போது இந்த மருந்து இல்லை என சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் தனயார் மருத்துவமனைகளிலும் இந்த மருந்து இல்லை என குறிப்பிடப்படுகின்றது.

Basiliximab மருந்துக்கு பதிலாக பயன்படுத்தப்படும் ஏடிஜி (ஆன்டிதைமோசைட்) என்ற மாற்று மருந்து அரச வைத்தியசாலைகளில் இல்லை என்றும், அது தனியார் துறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் இந்த மருந்து தீர்ந்துவிட்டதால், இவற்றை உடனடியாக வழங்குமாறு மருத்துவமனை மருத்துவ விநியோகப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மருந்து கிடைக்காவிட்டால் சத்திரசிகிச்சையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நேற்றைய (ஜூலை 25) நிலவரப்படி, தேசிய சிறுநீரக மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக பத்து நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர், மேலும் வாரத்திற்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் உள்ளன.

இந்த அத்தியாவசிய மருந்துகள் இல்லாத பட்சத்தில் திடீரென மூளை சாவடைந்து உயிரிழந்த ஒருவரிடமிருந்து சிறுநீரகம் பெறப்பட்டால் அதனை மாற்றும் வாய்ப்பும் இல்லாமல் போகும் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதுள்ள நிலைமைகளின் கீழ் சிறுநீரக சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டால், காத்திருப்புப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் எனவும், சத்திரசிகிச்சைகள் மீண்டும் மீண்டும் தாமதமான பின்னரும் நோயாளிகள் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...