13 23
இலங்கைசெய்திகள்

களனி பல்கலைக்கழக மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கை

Share

களனி பல்கலைக்கழக மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கை

களனி பல்கலைக்கழக கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

மார்பு மற்றும் முதுகுத்தண்டு பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவுகள் மற்றும் மூளையில் ஏற்பட்ட பாதிப்பினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மஹர பதில் நீதவான் விரேந்த கனங்கே நேற்று முன்தினம் (23) பிற்பகல் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு ராகமை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு களனி பொலிஸாருக்கு உத்தரவிட்டு்ளார்.

 

இதனையடுத்து ராகம பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஜே. ஏ. வினால் நேற்று (24 ம் திகதி) பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

களனி பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் கணக்கியல் பிரிவின் நான்காம் வருட மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

இவர் பிபில ரிதிமாலியத்த பிரதேசத்தை சேர்ந்த பிரின்ஸ் ராஜு பண்டார என்ற இருபத்து நான்கு வயதுடைய மாணவராவார்.

 

இந்த மாணவர் பல்கலைக்கழகத்தின் சி.டபிள்யூ.டபிள்யூ. கண்ணங்கரா மாணவர் விடுதியின் 416ஆம் இலக்க அறையில் அவர் தங்கியிருந்த போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில், பிபில பிரதேசத்தில் வசிக்கும் இம்மாணவனின் குடும்பத்திற்கு சடலத்தை எடுத்துச்செல்வதற்கு தேவையான உதவிகளை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

மேலும், மாணவனின் சடலத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா தெரிவித்துள்ளார்.

 

பல்கலைக்கழக விடுதியில் மாணவரொருவரின் பிறந்தநாளுக்கு விருந்து நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி வருவதாகவும், விடுதியில் முறைகேடு நடந்ததாக தகவல் கிடைத்தால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...