24 6640185749212
இலங்கைசெய்திகள்

கெஹலியவிற்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு

Share

கெஹலியவிற்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு சுமத்தி வழக்குத் தொடரப்பட உள்ளது.

தரம் குறைந்த மருந்து வகைகளை விநியோகம் செய்து அப்பாவி நோயாளிகளுக்கு உயிராபத்து ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப்பிரிவு விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி வழக்குத்தொடர்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தரம் குறைந்த மருந்து பொருட்களினால் சில மரணங்கள் பதிவானதுடன் 100க்கும் மேற்பட்டவர்கள் ஊனமுற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்பய்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய உள்ளிட்டவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் பூரண ஒத்துழைப்புடன் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என குற்ற விசாரணைப்பிரிவு அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....