இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலையில் கெஹெலிய கோரிக்கை

tamilni 87 scaled
Share

வெலிக்கடை சிறைச்சாலையில் கெஹெலிய கோரிக்கை

தனது வீட்டில் இருந்து கொண்டுவரும் மருந்துகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வெலிக்கடை சிறைச்சாலையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிது காலத்துக்கு முன்னர் சுகாதார அமைச்சராக கடமையாற்றிய தற்போதைய சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சர்ச்சைக்குரிய தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கடந்த 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 3ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம், அவர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறைச்சாலை மருத்துவமனையில் வழங்கப்படும் மருந்துக்குப் பதிலாக வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் மருந்துகளைப் பயன்படுத்த தனக்கு அனுமதி வழங்குமாறு அவர் சிறைச்சாலை மருத்துவமனை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் சிறைச்சாலை மருத்துவமனை மருத்துவர்களின் சிபாரிசுக்கு அமையவே அமைச்சரின் கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று வெலிக்கடை சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதே ​நேரம் அமைச்சரின் கோரிக்கை தொடர்பில் சிறைச்சாலை நிர்வாகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....