tamilnaadicv 1 scaled
இலங்கைசெய்திகள்

அமைச்சர் கெஹலிய வைத்தியசாலையில் அனுமதி

Share

அமைச்சர் கெஹலிய வைத்தியசாலையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியரின் பரிந்துரையின்பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி மோசடிக் குற்றச்சாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்றைய தினம் காலையில் மாளிகாகந்தை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி மூலம் அரசாங்க நிதி பாரியளவில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக செயற்பட்ட காலத்தில் இந்த மோசடி நடைபெற்றிருந்தது.

இந்நிலையில் அவரை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் லோசனா அபேவிக்கிரம உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜானக சந்திரகுப்த உள்ளிட்ட ஆறுபேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதற்காக மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்றைய தினம் (2.2.2024) கைது செய்யப்பட்டிருந்த கெஹெலிய ரம்புக்வெல்லவை நேற்று மாலையே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு அமைய இன்றைய தினமே அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார்.

அதற்கேற்ப தற்போதைக்கு மாளிகாகந்தை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தரமற்ற மருந்துப் பொருள் மோசடி தொடர்பான வழக்கில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட ஆறுபேர் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் முன்னாள் களஞ்சியப் பொறுப்பாளர் மாத்திரம் நேற்று முன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மிக உயர் அதிகார மட்டத்தில் இருப்பவராக ஊடகங்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் கெஹெலிய , நீதிபதி முன்பாக முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Share
தொடர்புடையது
25 693fd3d85a76b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊவா மாகாணத்தில் உள்ள 892 பாடசாலைகளும் இன்று நண்பகலுடன் மூடல் – சீரற்ற வானிலையால் அதிரடி முடிவு!

ஊவா மாகாணத்தில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, மாகாணத்திலுள்ள...

1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...