tamilni 355 scaled
இலங்கைசெய்திகள்

கெஹலியவுக்கு மறுக்கப்பட்ட பிணை

Share

கெஹலியவுக்கு மறுக்கப்பட்ட பிணை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் உத்தரவு பெப்ரவரி 29 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் மனித பாவனைக்கு உதவாத தரம்குறைந்த இம்யூனோகுளோபிலின் மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பிலான விசாரணைகளை அடுத்து கடந்த 2ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கெஹலிய கைது செய்யப்பட்டார்.

இதனடிப்படையில், மாளிகாகந்த நீதிமன்றில் கடந்த 3ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அதன் பின் சுகயீனம் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் கெஹெலிய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் தரமற்ற இம்யூனோகுளோபிலின் மருந்து இறக்குமதி தொடர்பான வழக்கு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள 06 பேர் மற்றும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஒருவர் என 07 பேர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கெஹெலிய ரம்புக்வெல்ல மாத்திரம் நீதிமன்றத்துக்கு வருகை தரவில்லை.

அதற்குப் பதிலாக அவர் கடுமையான உயர் குருதி அழுக்க நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகத்தின் மருத்துவ சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கெஹலியவின் சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன , கெஹெலியவின் உடல்நிலையை காரணம் காட்டி அவுருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் வாதம் செய்தார்.

எனினும் கெஹெலிய உள்ளிட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி லோசனா அபேவிக்கிரம உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் கெஹெலியவுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்குமாறு சிறைச்சாலை நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...