24 6656e7456b84c
இலங்கைசெய்திகள்

அரிசி தட்டுப்பாடு குறித்து தகவல்

Share

அரிசி தட்டுப்பாடு குறித்து தகவல்

நாட்டிலுள்ள மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கீரி சம்பா விற்பனைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கீரி சம்பாவின் கட்டுப்பாட்டு விலை 260 ரூபா எனவும் அரிசி ஆலை வைத்திருக்கும் வியாபாரிகள் கீரி சம்பாவை முந்நூறு ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பா அரிசியின் கட்டுப்பாட்டு விலை 230 ரூபாவாக உள்ளதால், ஆலைகளை வைத்திருக்கும் வியாபாரிகளிடம் அதனை விட அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிக விலைக்கு அரிசி வாங்கி கட்டுப்பாட்டு விலைக்கு விற்க முடியாததால், மொத்த விற்பனை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் கீரி சம்பா, சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நாட்களில் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் கடைகள் நுகர்வோர் அதிகாரசபையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன் ​​கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்வது தொடர்பாக முறைப்பாடு வந்தவுடன், வணிக வளாகங்களிலும், வணிக வளாகத்தை ஒட்டிய வணிக உரிமையாளர்களின் வீடு ஆகிய இடங்களில் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய சோதனை செய்யப்படும் என நுகர்வோர் அதிகாரசபை அதிகாரி தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
1760325390 G3C9lufWoAA88wr 1
உலகம்செய்திகள்

ஜஸ்டின் ட்ரூடோ – கேட்டி பெர்ரி காதல் வதந்தி மீண்டும் தீவிரம்: ஜப்பானியப் பிரதமரின் ‘பங்காளர்’ எனக் குறிப்பிட்ட பதிவு!

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்கப் பாடகி கேட்டி பெர்ரி இடையேயான காதல்...

images 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வழுக்கையாற்றுப் பாதுகாப்பு: WASPAR ஆய்வு முடிவுகளை நடைமுறைப்படுத்த வடக்கு ஆளுநர் உறுதி!

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம் என வலியுறுத்திய வடக்கு...

1500x900 44535787 chennai 07
உலகம்செய்திகள்

ஐரோப்பிய விதிகளை மீறிய எலான் மஸ்கின் எக்ஸ் தளத்திற்கு ரூ. 4,140 கோடி அபராதம்!

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் (X) வலைத்தளம், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய...

tamilnadu 4
இந்தியாஇலங்கைசெய்திகள்

டித்வா புயல் நிவாரணம்: தமிழக அரசு சார்பில் 950 தொன் அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பு!

‘டித்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக, தமிழக...