24 663c3d3754aa3
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்

Share

இலங்கைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்

“குஷ்” என்ற கஞ்சா போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ஐந்து மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய நடனக் கலைஞரான சந்தேகநபர் தனது சூட்கேஸில் மறைத்து வைத்து இந்த கஞ்சாவை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார்.

சந்தேகநபர் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து எயார் ஏசியா விமானம் FD-140 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

05 கிலோ 278 கிராம் எடையுடைய இந்த “குஷ்” கஞ்சா தனித்தனியாக 36 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...